வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்கள் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ளதுடன் இருப்பிடங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. தார் சீற்றுடன் இருக்கும் சுமார் 14 வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததுடன் அன்றாட செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளவர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 104 குடும்பங்களில் 450ற்கும் மேற்ப்பட்டோர் தங்கியுள்ளனர்.
இதில் 16 குடும்பங்களின் வீட்டிற்கு தார்சீட் போடப்பட்டுள்ளதால் கனமழை காரணமாக அச்சீற்று சேதமடைந்து காணப்படுவதுடன் வீட்டிற்குள் வெள்ளம் சென்றுள்ளதால் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தமக்கு தகரத்திலான சீற் அல்லது தற்காலிகமாக படங்கு தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.