வான் பாய்கிறது கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம்!!

1355

kilinochchi

தற்போது பெய்துகொண்டிருக்கும் மழை காரணமாக கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் ஓரடி வான் பாய்வதாக கிளிநொச்சி நீர்ப்பாசனப் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் ஏனைய குளங்கள் நிரம்பி வழிவதற்கான சாத்தியங்கள் தற்போது இல்லையெனவும் ஆனால் குளங்களின் நீர்மட்டம் சுமார் இரண்டரை அடிக்கு மேலாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

வருடத்திற்கு சுமார் 1200- 1400 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகின்ற நிலையில் 373 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது என்பது சாதாரண விடயமல்ல, இரணைமடுக் குள புனரமைப்பு பணிக்காக நீர் மட்டத்தினை குறைத்திருந்தோம்.

அதனால் எந்த பதிப்பும் இல்லை. இவ்வாறான மழைவீழ்ச்சி, குளங்களில் நீர்மட்டம் உயர்வாக உள்ள காலங்களில் பெய்திருந்தால் பாதிப்புக்கள் அதிகமாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.