கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மண்சரிவு காரணமாக ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காணமல் போனவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






