சீரற்ற காலநிலையினால் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்!!

656

Vegatables

சீரற்ற காலநிலையினால் நாட்டில் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக மழை காரணமாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறி வகைகளின் தொகை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர் சங்க முன்னாள் தலைவர் யூ.பி. ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில், பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் மரக்கறி வகைகளின் தொகை 90 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களிலிருந்து வழமையாக காலையில் வரும் மரக்கறி லொறிகள் மாலை வரையில் வரவில்லை. சீரற்ற காலநிலையினால் அறுவடை செய்ய முடியாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் மரக்கறி வகைகளின் விலைகள் உயர்வடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. மரக்கறி வகைகளுக்கு காணப்படும் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.