சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 64 வயது முதியவர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்திமிஸ்ரகம பிரதேசத்தில் வசிக்கும் 11 வயதுச் சிறுமி ஒருவரை அயல் வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி அயல் வீட்டுக்கு சென்ற சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் அயல் வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்