ஆஸ்துமா நோயினால் கடந்த வருடம் 2935 பேர் பலி!!

739

Asthma

கடந்த வருடம் மாத்திரம் ஆஸ்துமா நோயால் 2953 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆஸ்துமா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் எந்தவொரு சிகிச்சைகளும் பெறாத நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

நேற்று “உலக ஆஸ்துமா தினம்”அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் அதில் கலந்துக் கொண்டபோதே சுகாதார பணிப்பாளர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஆஸ்துமா நோயிலிருந்து சுகமடையலாம் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.