வவுனியாவில் 3 நாட்களாக தொடர்மழை : 2689 பேர் பாதிப்பு : 77 வீடுகள் சேதம்!!(படங்கள்)

373

 
வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் மழையினால் 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 3வது நாளாகத் தொடரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மழை காரணமாக 306 குடும்பங்களைச் சேர்ந்த 1134 பேரும், வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் 391 குடும்பங்களைச் சேர்ந்த 1508 பேரும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருமாக 711 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 689 பேர் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் 55 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வவுனியா வடக்கு பகுதியில் 21 வீடுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன.

உக்குளாங்குளம், திருநாவற்குளம், தாண்டிக்குளம், பாரதிபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளமையால் மக்கள் இடம்பெயர்ந்தது தங்களது உறவினர்களின் வீடுகளில் குடியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து செய்திகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

P1200489 P1200491 P1200492 P1200493 P1200494 P1200495 P1200496 P1200497 P1200498 P1200500 P1200501 P1200502 P1200504 P1200506 P1200507 P1200508 P1200509 P1200510 P1200512 P1200513