மழை தொடர்ந்து நீடிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!

563

Malai

தற்போது பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடிக்கும் எனவும், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.