வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் மழையினால் இன்று காலை நிலவரப்படி 711 குடும்பங்களைச் சேர்ந்த 2689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் 3வது நாளாகத் தொடரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் பிரதேசத்தில் மழை நீர் புகுந்ததால் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.