கேகாலை, புலத்கோபிட்டியவில் ஏற்பட்ட மண் சரிவில் 16 பேரைக் காணவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். கேகாலை, புலத்கோபிட்டிய, கலுபான வத்த என்னும் இடத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண் சரிவினால் ஆறு பெருந்தோட்ட லயன் வீடுகள் முழுமயாக சேதமடைந்துள்ளன. மண் சரிவு அனர்த்தத்தில் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுமே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கேகாலையின் இரண்டு மண்சரிவுகள். இதுவரை மூன்று பேரின் சடலங்கள் மீட்பு
கேகாலையில் நேற்று மாலையும் நள்ளிரவிலும் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்களின் போதுகாணாமல் போனோர் என்று கருதப்பட்டவர்களில் இதுவரை மூன்று பேரின் சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று மாலை அரநாயக்க சாமசர என்ற மலைப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதன்போது அங்கு குடியிருந்த சுமார் 150 குடும்பங்களின் 400 பேர்காப்பாற்றப்பட்டனர்.
இந்தநிலையில் இன்று காலை வெளியான தகவலின்படி அங்கு இரண்டு சடலங்கள்மீட்கப்பட்டுள்ளன.
இதனை தவிர நேற்று நள்ளிரவு பெருந்தோட்ட தமிழர்கள் வாழும் கேகாலை புலத்கோஹபிட்டியஎன்ற இடத்தில் ஏற்பட்ட மண்சரியில் 16 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இன்று காலை அங்கிருந்தும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை இரண்டு இடங்களிலும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன
இதன்போது மேலும் பல உயிருடனோ சடலங்களாகவோ மீட்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.






