தாழமுக்கம் இன்று கடந்து போகும் : மழை சில நாட்கள் தொடரும்!!

792

Rain

இலங்கையின் வான் பரப்பில் மையம் கொண்டுள்ள தாழமுக்க காலநிலை இன்று நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாடு வான்பரப்பில் நுழையக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தாழமுக்க காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பிரதேசங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
சிற்சில இடங்களில் மண் சரிவு காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் வான்பரப்பில் மையம் கொண்டிருந்த தாழமுக்கம் இன்று நகர்ந்து தமிழ்நாட்டின் வான்பரப்பில் நுழையவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

எனினும் வடக்கு, வடமத்தி, வடமேல் மாகாணங்கள் மற்றும் வடமேற்குப் பிராந்தியத்தில்இன்னும் சில நாட்கள் வரை மழை வீழ்ச்சி தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இன்னும் சில நாட்களில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகவுள்ளதால் தொடர்ந்தும் இலங்கையின் பல பிரதேசங்களிலும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.