கடந்த மூன்று நாட்களாக வவுனியாவில் பெய்த தொடர் மழை காரணமாக வவுனியாவில் பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றன.
குறிப்பாக வவுனியா குளம், நெளுக்குளம், குருமன்காட்டுக்குளம் , வைரவப்புளியங்குளம் என பல குளங்கள் வான் பாய்கின்றன.
வவுனியாவில் தற்போது மழை ஓய்ந்துள்ளதாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது வழமை நிலைக்கு திரும்புவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு கிராமங்களின் பாதைகளில் மக்கள் பயணிக்கமுடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.