மழை வெள்ளத்தில் ரெஜிபோம் பெட்டிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் ராகம வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடுகண்ணாவ மண்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மூன்று சிறுவர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்ட அறுவர் நேற்று காணாமல் போயிருந்தனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு உடல்கள் மீட்கப்பட்டிருந்தன நிலையில் காலநிலை சீர்கேட்டால் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.






