வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரஜைகள் குழு உதவி!!

372

 
வவுனியா வேப்பங்குளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உணவுப் பொதிகளை வழங்கியது.

வவுனியா கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் வசித்து வந்த 13 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேப்பங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கான மதிய உணவு, சிறுவர்களுக்கு பிஸ்கட், மைலோ, குடிநீர் போன்றவற்றை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வழங்கி வைத்தது.

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தா.சலசலோசன் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள் இம் மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பொதுமக்களினால் தற்போது தங்கியிருக்கும் பொதுநோக்கு மண்டபத்திற்கு மின்சார வசதியினை ஏற்படுத்தி தருமாறு மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வவுனியா வேப்பங்குளம் பொது நோக்கு மண்டபத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர்.

P1200552 P1200553 P1200554 P1200555 P1200556 P1200561 P1200562