வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் இடம்பெயர்ந்து வவுனியா வேப்பங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் தற்காலிகமாக வசித்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இக் கிராமத்திற்கு வடிகாலமைப்பு வசதி இன்மையால் இவ் அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை விமானப்படை அதிகாரிகள் இடம்பெயர்ந்த இம் மக்களின் குடியிருப்புக்களை பார்வையிட்டதுடன் அவர்களின் தேவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
இப் பொதுநோக்கு மண்டபத்தில் கைக்குழந்தைகளுடன் தாயார் படும் துயரங்கள் , சின்னச் சிறுவர்கள் உணவுக்காக காத்திருக்கின்ற நிலை மனதை உருக்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.