வவுனியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களின் விபரம் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 425 குடும்பங்களைச் சேர்ந்த 1651 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 309 குடும்பங்களைச் சேர்ந்த 1150 பேர் பாதிப்புக்குள்ளானதாகவும், 43 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும 21 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,
வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த் 56 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்,
மழை வெள்ளம் காரணமாக வவுனியா மரக்காரம்பளைப் பகுதியில் பொதுநோக்கு மண்டபத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் தற்காலிகமாக தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கிவருவதாகவும், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அதற்கான ஏற்பாடுளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.