வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள மீன் சந்தையின் கழிவுகளால் மக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர்.
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள மீன் சந்தையிலிருந்து வெளியேரும் கழிவு நீர் முறையான வடிகாலமைப்பு இன்மையால் மீன்சந்தைக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் செல்கின்றது.
இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்..
வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள இந்த மீன் சந்தையின் கழிவு நீர் எமது வர்த்தக நிலையத்திற்கு முன்னால் செல்கின்றது. இந்த துர்நாற்றத்துடன் எம்மால் இருக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
உரிய அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு.