நீர்ப்பாசன மற்றும் நிர்வழங்கள் முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஷா அவர்களினால் திறந்து வைக்கப்பவுள்ள நீர் வழங்கள் சபையின் வடமத்திய மாகாண காரியாலயத்திற்கு இணைந்ததாக நவீன ஆய்வுகூடம் மற்றும் வடமாகாணக் காரியாலயம் திறப்பது சம்பந்தமான நிகழ்ச்சித்திட்டம், மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஷா அவர்களினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதேச செயலாளர் கா.உதயராசா, விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், விவசாய அமைப்புக்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
























