வவுனியாவில் மோசஸ் சிறுவர் நிதியத்தினால் வறிய சிறுவர்களுக்கு உதவி!!

286

 
மோசஸ் சிறுவர் நிதியத்தின் – மலரும் மொட்டுக்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஆன்மீக தேவசபையின் ஒத்துழைப்புடன் மிகவும் பின்தங்கிய கிராமமாகிய ஈஸ்வரிபுரம், வவுனியா பிரதேசத்தில் வசிக்கும் அன்றாட அத்தியாவசிய தேவைகளைக் கூட கஷ்டத்தின் மத்தியில் முகம் கொடுத்துவந்த சுமார் 30 சிறுவர்களிற்கு பாடசாலை உபகரணங்களும், புத்தகப்பைகளும், உலர் உணவுப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வானது மோசே சிறுவர் நிதியத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பில் இருந்து அங்கு சமூகமளித்திருந்த குழுவினராலும், ஆன்மீக தேவசபையின் விசுவாசிகளின் மற்றும் தன்னார்வத் தொண்டர்களாலும் வவுனியா ஈஸ்வரிபுரம் பிரதேசத்தில் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்திச் செல்லப்பட்டது.

மேலும், சிறுவர்களின் ஏனைய சந்திக்கப்படாத தேவைகளையும் அக் குழுவினர் நேரடியாக அவதானித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

மோசஸ் சிறுவர் நிதியத்தின் – மலரும் மொட்டுக்கள் நிகழ்ச்சித் திட்டமானது சிறுவர்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை சந்திக்கும் ஒரு பயணம் எனும் கருப்பொருளினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

news (1) news (2) news (3) news (4) news (5) news (6) news (7) news (8) news (9) news (10) news (11) news (12)