சீரற்ற காலநிலை சீர்கேட்டினால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் நாளை(20.05.2016) இடம்பெறாது என்று கொழும்பு அரசின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று மதியம் செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.
இருப்பினும், வடக்கு மாகாணத்தில் காலநிலை சீராக இருப்பதால், வடக்கிலுள்ள சகல பாடசாலைகளும் நாளையதினம் வழமை போன்று இயங்கும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்ததாக ஒரு செய்தி சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனை கொண்டு கேட்ட போது, வடமாகாண பாடசாலைகள் நாளை(20.05.2016) இடம்பெறாது எனத் தெரிவித்தார்.






