அரநாயக்க மண் சரிவில் புதையுண்ட 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று!!

563

aranayaka-1

மாவனல்ல, அரநாயக்க பாரிய மண் சரிவில் புதையுண்டு உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

மண்சரிவில் புதையுண்ட 14 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது என மண்சரிவு மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த சடலங்களில் 9 சடலங்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

நேற்றைய தினம் அரசாங்க அதிகாரிகளும் பிரதேச மக்களும் இணைந்து நடத்திய கூட்டத்தின் போது, ஒன்பது பேரின் இறுதிக் கிரியைகளை இன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் இன்று ஒரே இடத்தில் இந்த மண் சரிவில் உயிரிழந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்பட உள்ளனர்.

அரநாயக்க பொது மயானத்தில் இந்த இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.

இதேவேளை, அரநாயக்க மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் காணப்பட்ட கிராமங்களின் மேல் 30 அடிக்கு மேல் மண் மூடியுள்ளதாகவும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகவும் மேஜர் ஜெனரல் ரணசிங்க தெரிவித்துள்ளார்.