தந்தையைக் கொன்று நீரோடையில் வீசிய மகன்!!

626

 
மாத்தறை ஊறுபொக்க தலபலாகந்த, தந்தெனிகந்த பிரதேசத்தில் சடலம் ஒன்று நேற்று 12.00 மணியளவில் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த 13ம் திகதி இரவு மகன் தனது தந்தையின் கழுத்தை நெரித்து கத்தியால் 3 துண்டுகளாக வெட்டி இறப்பர் சீட்டினால் சுற்றி காட்டு செடிகள் நிறைந்த நீரோடை ஒன்றில் எறிந்துள்ளார்.

அதன் பின்னர் துர்நாற்றம் வீசியதையடுத்து, பிரதேசவாசி ஒருவர் சடலம் கிடப்பதை கண்டு கிராமசேவகரின் ஊடாக ஊறுபொக்க பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சடலம் நேற்று எடுக்கப்பட்டு மரண பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

01 1 2 3