சீரற்ற காலநிலையைப் பயன்படுத்தி வீடுகளில் திருடிய 15 பேர் கைது!!

580

Robbery

வெள்ளம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியவர்களின் வீட்டில் திருடிய 15 நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் சொத்துக்களைப் பாதுகாக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.