இலங்கையின் இயற்கை அனர்த்தம் : மரணங்கள் 82 ஆக உயர்வு!!

1681

Rain

இலங்கையில் இன்று வெளியிட்டுள்ள இயற்கை அனர்த்த பாதிப்புக்கள் குறித்த அறிக்கையின்படி மரணங்கள் 82 ஆக உயர்ந்துள்ளன.

இயற்கை அனர்த்தம் காரணமாக 348 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 242 ஆயிரத்து 927 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் கேகாலை அரநாயக்க மண்சரிவின் பின்னர் இன்னும் 118 பேரை காணவில்லை என்று இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.