சீருடையைத் தொலைத்தவர்கள் சாதாரண உடையில் பாடசாலைக்கு வரலாம்!!

798

School

சீரற்ற காலநிலை காரணமாக சீருடையை தொலைத்த மாணவர்கள் சாதாரண உடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வௌ்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.