வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியாவில் மிவும் வறிய மக்களுக்கு வீட்டுக் கூரைத்தகரம் மற்றும் பொது அமைப்புக்களுக்கு பிளாஸ் ரிக்கதிரைகள், வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகள் என்பனவற்றை வழங்கினார்.
ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா தெற்கு பிரதேசபையினால் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கும் இன் நிகழ்வானது வவுனியா தெற்கு பிரதேசசபைச் செயலாளர் திருமதி கிசோர் சுகந்தி அவர்களின் தலமையில் நடைபெற்றது.

































