காதலுக்கு உதவிய தோழி தற்கொலை!!

346

Hang Death

பெற்றோரின் அறிவுரைகளை பொறுக்க முடியாமல் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்கமுப மஹானான்னெரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இச்சம்பவத்தில் மஹானான்னெரிய பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுலோசனா ரத்னாயக்க என்னும் 14 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது தோழியின் காதலுக்கு உதவி செய்தமை பெற்றோருக்கு தெரிய வந்ததைத்தொடர்ந்து, அவர்கள் கண்டித்தமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.