வவுனியா பூவரசங்குளம் தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் வறுமைகோட்டுக்கு உட்பட 40 மாணவர்களுக்கு தாலிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ப.அந்தோணிபிள்ளை தமிழ் விருட்சத்திடம் அவர்களின் நிலையை எடுத்து கூறி அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் படி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரான்ஸ் வாழ் உறவு மூலம் 21.05.2016 அன்று தாலிக்குளம் அ.த .க பாடசாலை மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர் திரு கா.பிரதீஸ், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ), செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் அன்றூ, சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ப.அந்தோணிபிள்ளை, செயலாளர் திருமதி இ.புனிதவதி, நிர்வாக உறுப்பினர்களான புனிதவதி, ஜெயபாரதி, ஜூலியட், கபலீஸ்வரி, மு.நாகலிங்கம் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


















