குடிபோதைக்கு அடிமையானதாக வதந்தி பரப்புகிறார் என் தந்தை : கனகா ஆவேசம்!!

583

kanaka

கனகா உடல்நிலை குறித்து சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியானது. இதையடுத்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் திரண்டனர்.

திடீரென்று அவர்கள் முன் கனகா ஆஜராகி நான் இறந்து போனதாக யாரோ பொய் செய்தி பரப்பி உள்ளனர். உயிருடன் தான் இருக்கிறேன் என்றார். ஆலப்புழாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்க போய் இருந்ததாக செய்தி பரப்பி உள்ளனர். நான் அங்கு போகவே இல்லை என்றார். ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க போவதாகவும் மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிறகு அவரது தந்தை வீட்டுக்கு போய் சண்டையும் போட்டார். இந்த நிலையில் கனகாவின் தந்தை தேவதாஸ் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு அளித்தார்.

அதில் ‘கனகா என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேட்டி கொடுத்து வருகிறார். அவர் இறந்து போனதாக நான் வதந்தி பரப்பினேன் என்கிறார். அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறேன் என்கிறார். எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து தந்தை மீது கனகா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது என் அப்பா என்னிடம் பாசமாக இருந்ததே இல்லை. எனக்கும் அவருக்கும் பாசம் வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை. நான் போதைக்கு அடிமையாகி இருப்பதாக என்னைப் பற்றி இப்போதும் அவர் வதந்தி பரப்பி வருகிறார். அவரை நான் மதிப்பது கிடையாது. அதனால் என்னை பழிவாங்க துடிக்கிறார் என்றார்.