யாழில் கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு!!

700

sadalam

யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து மாணவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (24.05) மாலை இடம்பெற்றுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அராலி தெற்கைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெசிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் இந்த மாணவன் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வட்டுக்கோட்டை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.