வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பிரஜை யாழ் கோப்பாயில் கைது..!

1130

arrest1கோப்பாய் பொலிஸ் பிரிவில் கல்வியங்காடு நகரில் வைத்து இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று யாழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.