நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

677

Rain

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று வெள்ளிக் கிழமை அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய மலைப் பிரதேசத்திலும், நாட்டின் கடற்கரைப்பிரதேசங்களிலும் அதிக காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலத்திணைக்களம் கூறியுள்ளது.

கிழக்கு கடற்கரைப் பிராந்தியங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அவர் கூறினார்.

காற்று மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும் எனவும் வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ளது.