பேருந்தில் பெண்ணுக்கு ஆபாச காணொளி காண்பித்த முதியவர் கைது!!

808

MObile

கண்டி, மாத்தளை வீதியில் பேருந்தொன்றில் பயணித்த பெண்ணுக்கு முகப்புத்தகத்திலிருந்த ஆபாச காணொளியொன்றினை காண்பித்த குற்றச்சாட்டின் பேரில் முதியவரை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (27.05) இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி சென்ற பேருந்தில் முதியவருக்கு அருகே அமர்ந்திருந்த 24 வயதுடைய யுவதிக்கு தனது முகப்புத்தகத்திலிருந்த ஆபாச காணொளியை காண்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் 61 வயதுடைய முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்