நேற்றிரவு முதல் கொழும்பின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக சில பகுதி வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன.
ஆமர்வீதி, பஞ்சிக்காவத்தை, தும்முல்ல ஆகிய பகுதி வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் ஆமர்வீதி, பஞ்சிக்காவத்தை பகுதி வீதிகளில் தற்போது நீர் வடிந்தோடியுள்ளதை அவதானிக்க முடிந்தது.






