வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் இன்று (28.05.2016) சற்றுமுன் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி விபத்தில் பொலிசார் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியாவிலிருந்து மன்னார் வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் அதே பாதையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த பொலிசார் சிறு காயங்களுக்குள்ளாகினார்.
இவ் விபத்தினை நேரில் பார்த்தவர் தெரிவிக்கையில், வவுனியாவிலிந்து மன்னார் வீதியினுடாக பயணித்த மோட்டார் சைக்கில் முன்னால் வாகனம் வருவதைக் கண்டு வீதியின் அருகே மோட்டார் சைக்கிளை திருப்பிய போது. அதே பாதையில் பயணித்த துவிச்சக்கர வண்டியில் மோதியதாக தெரிவித்தார்.






