வவுனியா குருமன்காட்டில் இன்று (28.05.2016) மதியம் 2.15 மணியளவில் நடந்த முச்சக்கரவண்டி , மோட்டார் சைக்கில் விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியிலிருந்து மன்னார் வீதிக்கு திரும்ப முற்ப்பட்ட முச்சக்கரவண்டி மீது மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கில் அதிக வேகத்துடன் பயணித்தாக சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.



















