ஒட்டுசுட்டான் தான்தோன்றிஸ்வரர் கோவிலைச் சூழவுள்ள வெளிவீதி பற்றைக்காடாக இருந்த போதும் இதை சம்பந்தப்பட்ட எவரும் துப்பரவு செய்யாமையால் இராணுவத்தினர் இப்பகுதியில் துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தமை காணமுடிந்தது.
எனினும் இப்பிரதேச மக்கள் எவரும் இப்பணியினை மேற்கொள்ளாத நிலைகண்டு சிலர் மனவருத்தப்படமையும் காணமுடிந்தது.
இன்னும் ஒரிரு வாரங்களில் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.















