அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளீர்ப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்காக மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்கும் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரச சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கியதுடன் சிறுவர் பிரிவு, சிறுநீரகப் பிரிவு மற்றும் பிரசவ விடுதிகளுக்கு இந்த பணிப் பகிஷ்பரிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.









