தனியாருக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு யாழ்பாணத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை நொச்சிமோட்டை பகுதியில் மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
சாரதியின் தூக்கத்தினால் பஸ் வண்டி வீதியை விட்டு இறங்கி ஒரு மரத்தின் மீது மோதியே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கூறினர்.
இச் சம்பவம் நேற்று (31.05.2016) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் 30க்கும் அதிகமானவர் பயணம் செய்ததாகவும் சிறுசிறு காயங்களுக்கு பலர் உள்ளானதாகவும் அதில் 6 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












