ஒரு கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள் செய்கிறார் இளைய தளபதி..!

736

தனது பிறந்த நாளான ஜூன் 22ம் திகதி ரூ 1 கோடி மதிப்புள்ள உதவிகளை வழங்குகிறார் நடிகர் விஜய்.
விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து இந்த விழாவை வருகிற 8ம் திகதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடத்துகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் இந்த விழாவில், சென்னை உயர்நீதிமன்ற பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி, விழாவை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு 3,900 ஏழைகளுக்கு கம்ப்யூட்டர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தையல் எந்திரங்களும் வழங்கி பேசுகிறார்.

விழாவில் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொள்கிறார்.