வவுனியா நெற் இணையம் இன்று (01.06.2016) 3ம் ஆண்டை நிறைவுசெய்து 4ம் ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றது. இதனை முன்னிட்டு வவுனியா தமிழ் ஊடகவியாலாளர்களுடன் வவுனியா நெற் தனது 3வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடியது.
கடந்த 01.06.2013 இல் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா நெற் இணையம் பல்வேறு தடைகளைத்தாண்டி வவுனியா மண்ணின் முன்னணி இணையத்தளமாக வலம்வருகின்றது.
எந்தவித அரசியல் நோக்கமுமின்றி புலம்பெயர் தமிழ் உறவுகளையும் தாயக உறவுகளையும் ஒன்றிணைப்பதற்காகவும், வவுனியா மண்ணின் நிகழ்வுகள் மற்றும் மண்ணின் சாதனையாளர்களை வெளிஉலகிற்கு தெரியப்படுத்துவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இவ் இணையத்தளம் பல்வேறு சவால்களையும் தாண்டி தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகின்றது.
குறுகிய காலத்தில் வவுனியா மண்ணில் வவுனியா நெற் இணையம் தடம்பதிக்க காரணமாக இருந்த வாசகர்கள், செய்தியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விளம்பரதாரர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இன் நேரத்தில் வவுனியா நெற் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
என்றும் உங்கள் ஆதரவுடன் உங்கள் பிரதேசத்தில் இருந்து உங்கள் குரலாக ஒலிப்போம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-வவுனியா நெற் நிர்வாகம்-










