உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் இன்று(03.06.2016) காலை வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, ஜெயதிலக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் தற்போதைய கோட்டக்கல்வி அதிகாரியுமான எம் பி. நடராஜ், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா, பாடசாலை அதிபர், அசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உலக சுற்றுச் சூழல் தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்துரைகளையும் மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
அத்துடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் அதிதிகளால் நாட்டப்பட்டது.












