வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாய இளைஞர் கழகங்களுக்கு வடமாகாண விவசாய அமைச்சினால் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா விவசாயப் பண்ணையில் இன்று (03.06.2016) இடம்பெற்றது.
விவசாயப் பண்ணையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக்ரஞ்சன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராஜா, ஆர்.இந்திராசா, அ.ஜெயதிலக, மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள், விவசாயிகள், இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகள் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.
வடமாகாண விவசாய அமைச்சிற்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் அறுவடை இயந்திரங்கள், நவீன முறையில் நாற்றுநடும் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழவில் வடமாகாண விவசாய அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்..
எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 410 மில்லியன் ரூபா மாத்திரமே. இன் நிதியையே ஐந்து மாவட்டங்களுக்கும் பிரிக்கப்பட வேண்டும். இதில் 240 மில்லியன் விவசாய திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டு அதில் 40 மில்லியன் ரூபாவை வவுனியா மாவட்டத்திற்கு ஒதுக்கியுள்ளோம்.
எங்களைப் பொறுத்தவரையில் உணவின் உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். இவ்வாறான இயந்திரங்களை வழங்குவது விவசாயத்துறைக்கு நன்மை தரக்கூடியது என்று தெரிவித்தார்.














