வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று(04.06.2016) காலை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம் நோக்கிப் பயணித்த பொலிஸ் வாகனமொன்று ஈச்சங்குளத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த துவிச்சக்கரவண்டி மீது மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த செ.அன்தன்லால் (22வயது) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






