பங்களாதேஷின் 9 சூதாட்ட வீரர்கள் ஐ.சி.சியால் இடைநிறுத்தம்..!!

375

icc

பங்களாதேஷ் பிரீமியர் லீக் 20-20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் தொடர்பாக 9 பேரை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த 9 பேரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதற்காக 7 பேரும் ஆட்ட நிர்ணயத்திற்காக சூதாட்டத்தரகர்கள் தங்களை அணுகியது தொடர்பாக புகார் தெரிவிக்காமல் இருந்ததற்காக இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 9 பேர் குறித்த விபரங்களை ஐ.சி.சி. வெளியிடவில்லை அவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது முடிந்த பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர் வெளியிடப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.