வரலாற்றுப் பிரசித்திபெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (06.06.2016)சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது
புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.