வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு உயர்தரம் கற்று மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உடற்கல்வி பாடநெறிக்கு தெரிவு செய்யபட்டு ஆரம்ப செலவிற்க்கு கூட வசதியற்றவர்களாக இருந்த சுதர்சினி ,சுதனலோஜினி ஆகிய இரு மாணவிகளுக்கும் கல்மடு மகாவித்தியாலய அதிபர் எஸ்.அமராவதி அவர்கள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரித்தானியா தமிழ் தேசிய செயற்பாட்டு குழுவால் இரு மாணவிகளுக்குமான பொருட்கள், போக்குவரத்து செலவுக்கான பணம் என்பன நேற்று (06.06.2016) வழங்கப்பட்டன.
பிரித்தானியா தமிழ் தேசிய செயற்பாட்டு குழுவால் வழங்கப்பட்ட இந்த உதவிகளை அதிபர் எஸ்.அமராவதி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயாலாளர் மாணிக்கம் ஜெகன், பாடசாலை ஆசிரியை திருமதி சீவரட்ணம் ஆகியோர் பாடசாலை அதிபர் காரியாலயத்தில் வைத்து வழங்கினர்.