வவுனியா புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயத்தில் நேற்று (06.06.2016) இரவு காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகே காணப்படும் புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயத்தில் நேற்று இரவு காட்டுயானைகள் பாடசாலை வாளகத்திற்குள் புகுந்து பயன்தரு மரங்களை சேதப்படுத்தியதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல் தினசரி அதிகரித்தே காணப்படுகின்றன. அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித பலனும் இல்லை என விசனம் தெரிவித்தார்.