வவுனியாவில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கான வாழ்வாதார உதவி!!

505

 
வவுனியா மாவட்டத்திற்கான ஒன்றுகூடல் நேற்று (08.06.2016) காலை 10.30 மணியளவில் வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் நடாத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் நோக்கோடு இத் திட்டம் நடைபெறுகின்றது.

இவ் விசேட ஒன்றுகூடலில் வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, G.T.லிங்கநாதன், ஜெயதிலக, சுகாதார அமைச்சின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தேன்மொழி மகேஸ்வரன், கத்தோலிக்க அருட்தந்தை, இந்துமதக் குருக்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

IMG_1143 IMG_1145 IMG_1147 IMG_1154 IMG_1165 IMG_1180 IMG_1187 IMG_1189 IMG_1196