பாகிஸ்தானில் பாராளுமன்றம் முன்பு 6 மணி நேரம் சுட்ட வாலிபர்..!

375


gunபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஹபிஷாபாத் நகரை சேர்ந்தவர் சிகந்தர் ஹயாத் (35). நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றம் அருகே காரில் வந்து இறங்கினார்.

அங்கு தனது மனைவி, மகன்களை மனித கேடயமாக வைத்து கொண்டு தானியங்கி துப்பாக்கியால் சுமார் 6 மணி நேரம் சரமாரியாக சுட்டுக் கொண்டே இருந்தார். இதனால் மிகவும் பரபரப்பான அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.



பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஷமுர்த் கான் அருகே சென்று சமாதானம் செய்ய முயன்றார். அவரால் முடியவில்லை. அதை தொடர்ந்து அதிரடிப் படையினர் சாமர்த்தியமாக முன்னேறி காலில் சுட்டு அவரை மடக்கி பிடித்தனர். அவரது மனைவி, குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

நவாஸ் செரீப் அரசை நீக்க வேண்டும். பாகிஸ்தானில் ஷிரியாத் எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.